Saturday, March 9, 2024

#மாண்புறு_மங்கையே

#மாண்புறு_மங்கையே 24.....
திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன்.....

அழகு என்ற சொல்லில் 
அழகாய் நம் எண்ணங்களை திசை திருப்பி நம்மை
அடிமை படுத்தி விடுகிறார்கள்

ஆசை என்ற பெயரில்
நகை பணம் என்று 
அற்ப சந்தோஷத்தில் நம்மை 
அடிமை படுத்தி விடுகிறார்கள்

அர்ப்பணிப்பு என்ற மந்திரத்தில் 
அன்னை தெய்வம் அன்பு என்று சொல்லி நம்மை
அடிமை படுத்தி விடுகிறார்கள்

ஆதரவு என்று சொல்லி
அனைத்து பிரச்சனைகளை கூறி அவர்கள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தி 
நம்மை 
அடிமை படுத்தி விடுகிறார்கள் 

அரவணைப்பு என்ற பெயரில் சேவைக்கே பிறந்தவர்கள் நாம் என்று
சொல்லி 
அடிமை படுத்தி விடுகிறார்கள் 

அடக்கம் என்ற பெயரில்
அடங்கி நடக்க சொல்லி
அடிமை படுத்தி விடுகிறார்கள் 

அக்கறை என்ற பெயரில்
அவர்களின் கைக்குள் 
அகப்பட்டு நம்மை
அடிமை படுத்தி விடுகிறார்கள் 

அடிமையாக இருக்கிறோம் என்பதை அறியாமலே அடிமை படுத்தி வைத்து இருக்கிறார்கள்....

ஆண் என்ற ஒற்றை ஆணவத்தை வைத்து
ஆண்டாண்டு காலமாக 
அடிமை சாசனம் எழுதி தந்தது போல
அடிமை படுத்தும் 
ஆண் வர்கத்திடம் இருந்து மீழ்வோம்.....

மாண்புறு மங்கையை....
மகிழ்ச்சி என்பது 
மற்றவர்களை சந்தோச படுத்துவது அல்ல....
மனதினில் புதைத்து மறைத்து வைத்த உன் 
மன எண்ணங்களை மருகும் கனவுகளை மிரட்டும் லட்சியங்கள்களை அடைய நீ எடுக்கும் முயற்சியே 
மகிழ்ச்சி என்று உணர் மனமே.....

No comments:

Post a Comment

கவிதைச் சண்டை.....

💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...