Thursday, March 21, 2024

கவிதை காதலி......

        
            கவிதை காதலியே....

கண்ணில் தோன்றும் காட்சிகள் எல்லாம் கவிதையாய் கிறுக்குகிறேன்.......

கவிதையே காதலாய் 
கனவு காண்கிறேன்...
காதலியே உனைக் கண்டு காதலால் கிறங்குகிறேன்

காற்றைப் போல 
காதலை சுவாசிக்கிறேன்
கனவுகளை எல்லாம் கவிதையாய் வடிக்கிறேன் கண்டு செல்வாயோ 
காதால் கேட்டு 
காதல் கொள்வாயோ....

காதலை பிடிக்கும் அளவுக்கு 
கவிதையும் பிடிக்கும்
கவிதையை பிடிக்கும் அளவுக்கு 
காதலியையும் பிடிக்கும்....

காதலையும் கவிதையையும் காதலனாய் எனையும் 
காண பிடிக்குமோ????
காதலியே.....

காதலை எல்லாம் கவிதையாய் எழுதினேன்
கவிதை நாளில் 
காதலை சொல்கிறேன் காதலனாய் ஏற்பாயோ......
கனவு என 
கலைந்து செல்வாயோ
காற்றை போல 
கடந்து செல்வாயோ....
கை சேர்வாயோ 
கனவு காதலியே.......

No comments:

Post a Comment

கவிதைச் சண்டை.....

💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...