ஏக்கம்
ஏக்கங்கள் பல
என்னுள் இருக்கு
எதையும் வெளிப்படையாக
எப்பொழுதும் பேசியது இல்லை....
ஏன் பேசவில்லை
எனக்கே புரியவில்லை...
ஏன் என்றால் தெரியவில்லை....
என்ன வேண்டும்
என்று கேட்கவில்லை...
ஏன், என்னாச்சு
என்று வினவ வில்லை....
எப்படிச் சொல்ல
எதையும் யாரும்
என்னிடம் கேட்காமல்.....
என் தேவை
என் எதிர்பார்ப்பு
எல்லாம் சிறியது.....
எதையும் எப்போதும்
எதிர்பார்க்க மாட்டேன் என
எளிதாக சொல்லி விடுவேன்....இருந்தும்
எதிர்பார்க்கும் மனதை
எதைச் சொல்லி
எனை காக்க
ஏமாற்றத்தில் இருந்து.....
எதுவோ ஒன்று
என்னுள் பிசைய
என்ன வேண்டும்
எனக்கே தெரியவில்லை....
எனக்குள்
எதையோ தேடி பார்க்கிறேன்.....
எப்பொழுதாவது
என்ன வேண்டும் ?
என்று கேட்டு விடேன்....
என்னவனே .......
ஏக்கமே இதுவாக இருக்க
என் செய்வேன் நான்????
No comments:
Post a Comment