Friday, March 15, 2024

சொல்


சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே......

பாடலின் வரிகள் கேட்ட பிறகு
அவனின் சொல்லில் உள்ள உணர்வுகளை உணர்ந்த தருணம்....

              சொல்....

சொல்லில் அடங்கா உணர்வுகளை 
ஒரு சொல்லில் சொல்லாமல் சொல்கிறான் அவனின் உணர்வுகளை.....


சொல்லுமா _ அன்பாய் ,நட்பாய்

சொல்லுப்பா _ பாசமாய்,பந்தமாய்

சொல்லுடா_ உரிமையாக பரிவாக.....

சொல்லுடாம்மா_அக்கறையாய் , அரவணைப்பாக

சொல்லிடேன்_பரிதவிப்பாக

சொல்றியா_ ஏக்கமாக ,எதிர்பார்ப்பாக....

சொல்லு _அமைதியாக, நிதானமாக

சொல்லுடி _ ஆசையாக ஆதங்கமாக

சொல்லித் தொலை_ கோவமாக, வெறுப்பாக

சொல்லேண்டி _ சலிப்பாக,சங்கடமாக.....

சொல்லப் போறியா இல்லையா _ அதட்டலாக, மிரட்டலாக,

சொல்லாயோ_ கவிதையாக,ரசனையாக

சொல்றாளா பாரு 
ராட்சசி _ ஒட்டு மொத்த காதலாக....

No comments:

Post a Comment

கவிதைச் சண்டை.....

💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...