சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே......
பாடலின் வரிகள் கேட்ட பிறகு
அவனின் சொல்லில் உள்ள உணர்வுகளை உணர்ந்த தருணம்....
சொல்....
சொல்லில் அடங்கா உணர்வுகளை
ஒரு சொல்லில் சொல்லாமல் சொல்கிறான் அவனின் உணர்வுகளை.....
சொல்லுமா _ அன்பாய் ,நட்பாய்
சொல்லுப்பா _ பாசமாய்,பந்தமாய்
சொல்லுடா_ உரிமையாக பரிவாக.....
சொல்லுடாம்மா_அக்கறையாய் , அரவணைப்பாக
சொல்லிடேன்_பரிதவிப்பாக
சொல்றியா_ ஏக்கமாக ,எதிர்பார்ப்பாக....
சொல்லு _அமைதியாக, நிதானமாக
சொல்லுடி _ ஆசையாக ஆதங்கமாக
சொல்லித் தொலை_ கோவமாக, வெறுப்பாக
சொல்லேண்டி _ சலிப்பாக,சங்கடமாக.....
சொல்லப் போறியா இல்லையா _ அதட்டலாக, மிரட்டலாக,
சொல்லாயோ_ கவிதையாக,ரசனையாக
சொல்றாளா பாரு
ராட்சசி _ ஒட்டு மொத்த காதலாக....
No comments:
Post a Comment