Saturday, May 25, 2024

கவிதைச் சண்டை.....



💞💞💞💞💞
சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்...
,💜💜💜💜💜💜💜
அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்....
ஆனால்
அவன் பேசாமலே என்னை அழ வைத்து கொண்டு இருக்கிறான்.....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இருவரும் பேசிக் கொள்ளாத நேரங்களில் 
எங்களின் மௌனம் பேசிக் கொள்கிறது....
💙💙💙💙💙💙💙
எதிர் பார்த்ததை செய்ய வில்லை என்று கோவம் கொள்ள வில்லை 
எதிர் பாக்க வைத்து விட்டாயே என்று தான் கோபம்.... 
💟💟💟💟💟💟💟💟

பேசிக் கொள்ளாத போது என்னை நினைத்துக் கொள்வாயா?????
நினைத்து கொண்டு இருப்பதினால் தான் பேசாமல் இருக்க முடியுது...... 

🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
பேசி தீர்த்துக் கொள்ளலாம் கோபங்களை என்றேன்....
தீர்க்கமாய் பேசியதால் தான் கோவம் என்கிறாய்....
💛💛💛💛💛💛💛💛

சண்டை போட்டு பேசாமல் போகிறாய் நீ
பேசுவதற்காகவே சண்டை போடுகிறேன் நான்......💚💚💚💚💚💚💚

Tuesday, May 14, 2024

ஏமாற்றம்

பிறப்பில் ஆரம்பித்த ஏமாற்றம்
பெண் பிள்ளையாக 
பிறந்து 
பெற்றவர்களின் ஏமாற்றம்....
பிடித்த படிப்பை 
படிக்க விடாத பெற்றவர்கள் மீது
பிள்ளைகள் ஏமாற்றம்....
பழகிய நட்புக்களின் 
பிரிவினை ஏமாற்றம்.....
பிடித்த வேலை கிடைக்காமல் 
பழகிக் கொள்ள வேண்டிய 
பாதி வாழ்க்கை ஏமாற்றம்....
எதிர் பார்ப்பை வைத்துக் கொள்ளாதே....
ஏமாற்றம் தான்.....
எதையும் எதிர்க் கொள்....
எப்பொழுதும் அன்புடன்....
எதுவும் கடந்து போகும்......

Thursday, April 18, 2024

நம் காதல்

நம் காதல்.....

உன் கண்களின் தேடல் 
என் காதலின் பாடல்

உன் நெஞ்சின் தவிப்பு 
என் மனதின் பூரிப்பு

உன் மௌனம்
என் மொழி......

உன் பேச்சு
என் கவிதை
 
உன் விழி பாஷை
என் வாழ்வின் பூரணம் 
 
என்னுள் நீ நுழைந்து 
உன்னுள் நான் உணர்ந்தேன் 

நம் காதலை.....

Monday, April 1, 2024

ஏக்கம்


                        ஏக்கம்

ஏக்கங்கள் பல
என்னுள் இருக்கு
எதையும் வெளிப்படையாக
எப்பொழுதும் பேசியது இல்லை....

ஏன் பேசவில்லை
எனக்கே புரியவில்லை...

ஏன் என்றால் தெரியவில்லை....

என்ன வேண்டும் 
என்று கேட்கவில்லை...

ஏன், என்னாச்சு 
என்று வினவ வில்லை....

எப்படிச் சொல்ல 
எதையும் யாரும்
என்னிடம் கேட்காமல்.....

என் தேவை 
என் எதிர்பார்ப்பு 
எல்லாம் சிறியது.....

எதையும் எப்போதும் 
எதிர்பார்க்க மாட்டேன் என
எளிதாக சொல்லி விடுவேன்....இருந்தும்
எதிர்பார்க்கும் மனதை
எதைச் சொல்லி
எனை காக்க
ஏமாற்றத்தில் இருந்து.....

எதுவோ ஒன்று
என்னுள் பிசைய 
என்ன வேண்டும் 
எனக்கே தெரியவில்லை....
எனக்குள் 
எதையோ தேடி பார்க்கிறேன்.....

எப்பொழுதாவது 
என்ன வேண்டும் ?
என்று கேட்டு விடேன்....
என்னவனே .......
ஏக்கமே இதுவாக இருக்க 
என் செய்வேன் நான்????

அறம்

                     அறம்

அன்பாய் பேசுவதே
அறம்.....
அடுத்தவர்களையும் புரிந்து கொள்வதே அறம்....
ஆதரவாய் நிற்பதே 
அறம்....
அனுசரித்துப் போவதும் அறமே.....
அரவணைத்துச் செல்வதும் அறம்....
அகத்தில் நிதானமாக இருப்பது அறம்....
அறத்துடன் இருப்போம் அனைவரிடத்திலும்....

Thursday, March 21, 2024

கவிதை காதலி......

        
            கவிதை காதலியே....

கண்ணில் தோன்றும் காட்சிகள் எல்லாம் கவிதையாய் கிறுக்குகிறேன்.......

கவிதையே காதலாய் 
கனவு காண்கிறேன்...
காதலியே உனைக் கண்டு காதலால் கிறங்குகிறேன்

காற்றைப் போல 
காதலை சுவாசிக்கிறேன்
கனவுகளை எல்லாம் கவிதையாய் வடிக்கிறேன் கண்டு செல்வாயோ 
காதால் கேட்டு 
காதல் கொள்வாயோ....

காதலை பிடிக்கும் அளவுக்கு 
கவிதையும் பிடிக்கும்
கவிதையை பிடிக்கும் அளவுக்கு 
காதலியையும் பிடிக்கும்....

காதலையும் கவிதையையும் காதலனாய் எனையும் 
காண பிடிக்குமோ????
காதலியே.....

காதலை எல்லாம் கவிதையாய் எழுதினேன்
கவிதை நாளில் 
காதலை சொல்கிறேன் காதலனாய் ஏற்பாயோ......
கனவு என 
கலைந்து செல்வாயோ
காற்றை போல 
கடந்து செல்வாயோ....
கை சேர்வாயோ 
கனவு காதலியே.......

Friday, March 15, 2024

சொல்


சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே......

பாடலின் வரிகள் கேட்ட பிறகு
அவனின் சொல்லில் உள்ள உணர்வுகளை உணர்ந்த தருணம்....

              சொல்....

சொல்லில் அடங்கா உணர்வுகளை 
ஒரு சொல்லில் சொல்லாமல் சொல்கிறான் அவனின் உணர்வுகளை.....


சொல்லுமா _ அன்பாய் ,நட்பாய்

சொல்லுப்பா _ பாசமாய்,பந்தமாய்

சொல்லுடா_ உரிமையாக பரிவாக.....

சொல்லுடாம்மா_அக்கறையாய் , அரவணைப்பாக

சொல்லிடேன்_பரிதவிப்பாக

சொல்றியா_ ஏக்கமாக ,எதிர்பார்ப்பாக....

சொல்லு _அமைதியாக, நிதானமாக

சொல்லுடி _ ஆசையாக ஆதங்கமாக

சொல்லித் தொலை_ கோவமாக, வெறுப்பாக

சொல்லேண்டி _ சலிப்பாக,சங்கடமாக.....

சொல்லப் போறியா இல்லையா _ அதட்டலாக, மிரட்டலாக,

சொல்லாயோ_ கவிதையாக,ரசனையாக

சொல்றாளா பாரு 
ராட்சசி _ ஒட்டு மொத்த காதலாக....

கவிதைச் சண்டை.....

💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...